TNPSC தேர்வுகளும் அதன் தகுதி வரம்புகளும் ஒரு பார்வை!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முக்கிய குரூப் தேர்வுகளுக்கும் கல்வித் தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை போன்ற அனைத்து விவரங்களும் விரிவாக இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு:
- டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் கலந்து கொள்வதற்கு தேர்வர்கள் கட்டாயம் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 21 ஆண்டுகளும் அதிகபட்சமாக 34 வயது கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
- குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வுகள் 39 வரை தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பரிந்துரைக்கப்பட்ட வயது வரம்பை விட பத்து வயதுக்கு மேல் இருக்க இருக்கலாம்.
- குரூப்-1 தேர்வானது முதல் நிலை மற்றும் முதன்மை நிலை என்ற இரண்டு எழுத்து தேர்வுகளையும், மூன்றாவதாக நேர்காணல் தேர்வையும் கொண்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 &2A:
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் 2 A தேர்வு எழுதுவதற்கும் தேர்வர்களுக்கு கட்டாயம் பட்டப்படிப்பு அவசியமாகும்.
- குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்ச 32 வயதை வரை பொது பிரிவினருக்கான வயதுவரம்பும், சிறப்பு வகை பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதல் நிலை மற்றும் முதன்மை என்ற இரண்டு எழுத்து தேர்வுகளையும், 40 மதிப்பெண்களுக்கு நேர்காணல் தேர்வையும் கொண்டுள்ளது.
டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு:
- குரூப் 4 தேர்வுக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
- தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் தட்டச்சு செய்வதில் அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துக்கான அரசு தொழில்நுட்ப பயிற்சி பெற்றெடுக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது வரையிலும் குறிப்பிட்ட பிரிவினர் 34 வயது வரையிலான வரம்புகளையும் கொண்டுள்ளனர்.
- ஒரே கட்ட எழுத்து தேர்வு மட்டுமே குரூப் 4 பதவிகளுக்கு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.