மூத்தகுடிமக்களுக்கு அதிரடி ஆஃபர் – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!!!
கொரோனா நோய் தொற்று காரணமாக விமான சேவை பின்தங்கிய நிலை காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பயணசீட்டில் 50% சலுகை அறிவித்துள்ளது.
கட்டணத்தில் சலுகை:
விமானப் போக்குவரத்தில் சீனாவிற்கு அடுத்து வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு இந்திய விமானச் சந்தையின் வர்த்தகத்தையும் வளர்ச்சியும் பெரிய அளவில் பாதித்துள்ளது. தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை டா டா குழுமம் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
ரயில்வே துறையின் சிறப்புகளும் !! அதன் நன்மைகளும்!!
அதன்படி இந்தியாவில் வசிக்கும் 60 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50% சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகை இந்தியாவில் நிரந்தரமாக இருக்கும் குடிமக்களுக்கு மட்டும் பொருந்தும். மேலும் இந்த திட்டம் உள்நாட்டு விமானங்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் இந்த சலுகைக்கு தகுதியானவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – மயில்சாமி அண்ணாதுரை!!
முன்பதிவு செய்யும் போது, பிறந்த தேதியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஏர் இந்தியா வழங்கிய மூத்த குடிமக்கள் அடையாள அட்டை) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும். இதேபோல் பயண நாளில் செக்-இன் செய்யும் போது பதிவு செய்த அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். இல்லையெனில் டிக்கெட்டிற்கு முழுக் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் டிக்கெட்டுக்கான கட்டணம் திருப்ப வழங்கப்படாது, வரி மற்றும் இதர கட்டணங்கள் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்