பொறியியல் வகுப்புகளுக்கு புதிய அட்டவணை வெளியீடு !!!!!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் 16 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தாக்கம் குறையாததினால் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆனது 62 ஆவது கூட்டத்தினை சமீபத்தில் நடத்தியது. அதில், செப்டம்பர் மாதத்திற்குள்கலந்தாய்வினை முடித்து விட வேண்டும் முழுவதும் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கும் அறிவித்து உள்ளது.
கொரோனவினால் ஜூலையில் தொடங்கும் கல்வியாண்டினை செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கற்றல், கற்பித்தல், செயல்முறைகள் ஆகியவற்றின் மூலம் பாடங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கையினை முதல் சுற்றினை ஆகஸ்ட் 30 மற்றும் 2,3 சுற்றுகளை செப் 15 குள்ளாகவும் முடித்து விட வேண்டும் எனவும், முதலாமாண்டு சேர்க்கையினை செப்டம்பரில் நடத்தவும், 2,3,4 ஆம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்டு 16ல் தொடங்கவும் தற்போது திட்டமிடப்பட்டள்ளது.
பட்ட மற்றும் சான்றிதழ் படிப்புகளின் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 10 அன்றுக்குள் முடிக்கப்பட்டு வகுப்புகள் செப் 15 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |