ரெட் அலர்ட் நிலையில் இயங்கும் முக்கிய துறைகள்.. மீண்டும் 100% WFH – அதிகரிக்கும் கொரோனா அச்சம் எதிரொலி!
தற்போது கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருவதில், முக்கிய துறைகளில் இனி வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அமல்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.
ரெட் அலர்ட்:
சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் அதிக வீரியம் கொண்ட BF.7 என்ற கொரோனாவின் ஒமிக்ரான் வகை வைரஸ் பரவி பாதிப்பை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மத்திய அரசு நாட்டில் சோதனைகளை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் கூட விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
GRI திண்டுக்கல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனால், சுற்றுலா, ஹாஸ்பிடாலிட்டி, போக்குவரத்து மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய துறைகளின் ஊழியர்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஊரடங்கு விதிக்கப்படும் பட்சத்தில் ஈகாமர்ஸ், EdTech, ஆன்லைன் கேமிங், லாஜிஸ்டிக்ஸ், பின்டெக் போன்ற துறைகளில் அதிக ஊழியர்கள் தேவை இருக்கும். ஆனால் நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலை காரணமாக புதிய ஊழியர்களை தற்காலிகமாக நியமிக்காமல் உள்ளது. மேலும், தற்போது தான் பல நிறுவனங்களும் ஊழியர்களை நேரடியாக அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டால் கட்டாயம் WFH தான் சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.