விபத்தில் உயிரிழப்போருக்கு கூடுதல் இழப்பீடு – சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!!

0
விபத்தில் உயிரிழப்போருக்கு கூடுதல் இழப்பீடு – சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!!

அடையாளம் தெரியாத வாகனத்தால் ஏற்படும் விபத்துகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீடு:

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது, சாலை விபத்துகளை ஏற்படுத்தி விட்டு வாகனங்களை நிறுத்தாமல் அந்த இடத்தைவிட்டு தப்பித்து விடுகின்றனர். வாகன சட்டத்தின் படி, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும்போது, விபத்தில் உயிரிழந்தோருக்கு ஒன்றிய அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு மற்றும் படுகாயமடைபவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் 50% சலுகை – ரயில்வே அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில், அடையாளம் தெரியாத வாகனங்களால் விபத்துகள் ஏற்படுத்தப்பட்டு அதனால் உயிரிழப்போர் மற்றும் படுகாயமடைவோருக்கு கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனால், ஒன்றிய அரசு இழப்பீடு தொகையை உயர்த்துவது தொடர்பாக 8 வாரங்களுக்குள் தங்கள் முடிவை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!