இனி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 நிதியுதவி – முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் கட்டுமான பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 நிதியுதவி அளிக்க தொழிலாளர் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
நாட்டின் தலைநகர் டெல்லியில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் காற்றின் வேகம் மற்றும் திசை சாதகமற்றதாக மாறும் என நிபுணர்கள் கணித்து இருக்கின்றனர். இந்நிலையில் காற்றின் தரம் மோசமடையும் என்பதால், காற்றின் தர மேலாண்மை ஆணையம் திட்ட நடவடிக்கையின் மூன்றாம் கட்டத்தின் கீழ், கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை செயல்படுத்த டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் பள்ளிகள் மூடல்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் – காற்று மாசுபாடு எதிரொலி!
Exams Daily Mobile App Download
மேலும் அரசு துறைகளில் உள்ள அனைத்து கட்டுமான நிறுவனங்களுடன் பேசி இந்த தடையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய உத்தரவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதன் படி கட்டுமானப் பணிகள் தடை நீக்கப்படும் வரை கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 நிதியுதவி அளிக்க தொழிலாளர் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனால் கட்டுமான பணி செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.