இந்தியாவில் மீண்டும் பள்ளிகள் மூடல்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் – காற்று மாசுபாடு எதிரொலி!
தற்போது இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லி வாழ் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் காற்றின் தரம் குறித்து பேசியுள்ளார்.
பள்ளிகள்:
டெல்லியில் கடந்த 2 வருடங்களாக காற்று மாசுபாடு உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் டெல்லி மக்கள் பல வித நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் பலர் சுவாச கோளாறு பிரச்சனையால் அவதிப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் காற்று மாசுபாட்டால் டெல்லி மருத்துவமனையில் ICU வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் தான் என்கின்றனர். சமீபத்திய ஆய்வறிக்கை தகவலின் படி காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் டெல்லி காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டெல்லியில் காற்றின் தர குறியீடு 450ஐ தாண்டும் போது மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த வருடம் காற்று மாசுபாட்டால் பள்ளிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.