தற்போது வரையிலும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்காமல் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
பான் ஆதார் இணைப்பு:
பான் மற்றும் ஆதார் கார்டினை இணைக்கும் படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் தற்போது வரையிலும் பலரும் இணைக்காமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், ஜூன் மாதம் வரையிலும் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை நோட்டீசை அனுப்பி வருகிறது.
மத்திய அரசில் ரூ.56,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
பொதுவாக, வணிக நிறுவனங்கள் பொதுமக்களின் வருமானத்திற்கு ஏற்றவாறு ஆதார் மற்றும் பார் இணைப்பின் அடிப்படையில் 0.1 முதல் 10 சதவீதம் வரையிலும் டிடிஎஸ் கழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு 20% வரையிலும் டிடிஎஸ் கழிக்கப்படும் என சம்மந்தப்பட்ட பொதுமக்களுக்கு வரிவிலக்கு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். எனவே, உடனடியாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.