இன்று தமிழக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அலர்ட்!

0
இன்று தமிழக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையமானது இன்று தமிழகத்தில் லேசான மழைப்பொழிவு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

கடந்த 24 மணி நேரத்தில் நிலவரப்படி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானில் நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் Assistant Director காலிப்பணியிடங்கள் – சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

மேலும் நாளை முதல் 22 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானில் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!