தமிழகத்தில் அரிசி கொள்முதல் குறைந்திருக்கும் நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரிசி தட்டுப்பாடு:
தமிழகத்தில் பொதுவாக தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் குறுவை, சம்பா உள்ளிட்ட பல்வேறு வகை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு நெல் சாகுபடி பகுதி அளவாக குறைந்திருக்கும் நிலையில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நெல் விலை கிலோ ரூ.12 வரையிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? மத்திய அரசின் எச்சரிக்கை நோட்டீஸ்!!
இதனால், பல்வேறு மாநிலங்களில் அரிசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், தமிழகத்தில் தற்போது வரையிலும் ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் தொடர்ச்சியாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் ஒரு சில நாட்களில் ரேஷன் கடைகளிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.