அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து – முதல்வர் அறிவிப்பு!!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் மற்றும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். இது தொடர்பான ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் அறிவிப்பு:
தமிழகத்தின் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு அரசு அனுமதி வழங்காத நிலையில், உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதனால் பதவி உயர்வு மற்றும் பல சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் நிலவியது.
தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் வருகைப்பதிவு – ஆசிரியர் சங்கம் தகவல்!!
இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் வழக்குகள் என அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளார். ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற உயரிய கருத்தை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பிப்.13க்குள் நிரப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!
மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை என்றுமே அரசு புறந்தள்ளியதில்லை என தெரிவித்துள்ள முதல்வர், ஊக்கத்துடனும், ஆக்கமுடனும் சிறப்பாக அனைவரும் பணியாற்ற வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்