ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இல்லை, திறன் அடிப்படையிலான விளையாட்டு – உயர்நீதிமன்றம் கருத்து!
நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி குறித்த பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடகா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி:
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை பரவலாக பலரும் விளையாடி வருகிறார்கள். இதனால் சிலர் தங்கள் பணம், பொருள் அனைத்தையும் இழந்து உயிரை விடும் நிலைக்கு சென்றுள்ளனர். இத்தகைய நிலையில் பலரும் தங்கள் வாழ்வை தொலைத்து வருவதால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – வலுக்கும் கோரிக்கை… ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்!
இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், ஆன்லைன் ரம்மி முற்றுலும் திறன் அடிப்படையிலான விளையாட்டு என்றும், நேரடியாக நபர்களுடன் விளையாடினாலும், ஆன்லைனில் கணினியில் விளையாடினாலும் சூதாட்டம் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download