ரேஷன் கடைகளில் வந்துள்ள புதிய திட்டம் – இனி ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தலாம்!
ரேஷன் கடைகளில் வைபை வசதி அறிமுகம் செய்யப்பட போவதாக அரசு அறிவித்தது. இதன் மூலம் கடைகளுக்கு அருகில் உள்ள மக்கள் இணைய சேவையை எளிதாக பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் பணம் செலுத்துவதில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பெற்று வருகின்றனர். கடந்த வருடங்களில் நிலவிய ஊரடங்கு நாட்களில் மாநில அரசு ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கியது. இதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர். தற்போது ரேஷன் கார்டு அனைத்து வேலைகளுக்கு அவசியமாகிறது. மேலும் இருப்பிட சான்றாகவும் கருத்தில் கொள்ளபடுவதால் பெரும்பாலான மக்கள் ரேஷன் கார்டு பெற முயற்சித்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால் நாளுக்கு நாள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் வைஃபை திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் மூலம் அந்த கடைக்கு அருகில் வசிப்பவர்களுக்கு இணையதள சேவை பெற முடியும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Exams Daily Mobile App Download
அதன் தொடர்ச்சியாக தற்போது ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அதற்கு G PAY செயலி வாயிலாக பணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை அண்ணா நகர், திருமங்கலம், திருநகர் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் G PAY மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருட்கள் பெறும் முறையை கூட்டுறவுத்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். மேலும் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி இதுவரை 14 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்