GET தேர்வில் வெளிமாநிலத்தவர் அதிகளவில் தேர்ச்சி – என்எல்சி நிறுவனம் விளக்கம்!!
பணி நியமன தேர்வு:
என்எல்சி நிறுவனம் பொறியியல் பட்டதாரி மற்றும் மேலாண்மை பட்டதாரிகளுக்கான பயிற்சியாளர் தேர்வுகளை கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எழுத்துத்தேர்வை நடத்தியது. 2020ம் ஆண்டு நிர்வாக பட்டதாரி பயிற்சியாளர் பணிக்காக 259 காலிப்பணியிடங்கள் இருப்பதாக நிர்வாகம் அறிவித்தது.
நாடு முழுவதும் 2 நாள் வேலை நிறுத்தம் – வங்கி ஊழியர்கள் அறிவிப்பு!!
அரசியல் தலைவர்களின் சர்ச்சை:
தேர்வானது இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. எழுத்துத்தேர்வில் 1,582 பேர் தேர்ச்சி பெற்று அடுத்தகட்ட நேர்முகத்தேர்வுக்கு தேர்வாகியுள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் மட்டுமே அடுத்தகட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் வெளி மாநிலத்தில் தேர்வு நடத்தப்பட்ட தேர்வு மையங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
என்எல்சி நிறுவனத்தின் அறிக்கை:
இதனால் என்எல்சி நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் என்பதால் அரசின் விதிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 105 நகரங்களில் 261 மையங்களில் நடந்த தேர்வின் சிசிடிவி காட்சிகள் உள்ளன. இதில் எந்த விதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்