நாடு முழுவதும் 2 நாள் வேலை நிறுத்தம் – வங்கி ஊழியர்கள் அறிவிப்பு!!
வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து வங்கி ஊழியர் அமைப்புகளின் சங்கங்கள் அனைத்தும் இணைந்து நாடு முழுவதும் 2 நாள் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
வங்கி தனியார் மயமாக்கல்:
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் நிலுவைத்தொகை அதிகரித்து வருவதால் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளதாக நடப்பு ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்தார். 2 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்று அதன் பின்னர் வங்கிகள் தனியார்மயமாக்க இருப்பதாக கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் – பிப்.22ம் தேதி கடைசி நாள்!!
மத்திய அரசின் இந்த அறிவிப்பு காரணமாக நாட்டில் உள்ள அனைத்து வங்கி ஊழியர் அமைப்புகளின் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்காக நாடு முழுவதும் பிப்ரவரி 4ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
TN Job “FB Group” Join Now
வேலை நிறுத்தம்:
இந்திய வங்கித் துறையை மேம்படுத்த மத்திய அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி இரண்டும் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வங்கி ஊழியர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்காக நாடு முழுவதும் மார்ச் 15 மற்றும் 16ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்