தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – வினாத்தாள் தயாரிப்பு பணிகள்!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதுத்தேர்வு வினாத்தாள்:
தமிழக்தில் கொரோனா காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்ட பள்ளிகள் பொதுத்தேர்வு தேதி நெருங்குவதால் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டன. சட்டமன்ற தேர்தல் தேதிக்கு பின் பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 300 பொதுத்துறை நிறுவனங்கள் 12 ஆக குறைப்பு – மத்திய அரசு திட்டம்!!
இந்நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சுமையை குறைக்க அரசு 30% பாடத்திட்டத்திலிருந்து 40% பாடத்திட்டம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் எல்.இ.டி, டியூப் லைட், மின்விசிறி அமைப்பு – மத்திய அரசு நிதி!!
மேலும் அரசு பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்களை கொண்டு வினாத்தாள்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பாடத்திட்டங்களில் உள்ள வினாத்தாள்கள் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. மூன்று கட்டங்களாக தயாரிக்கப்பட்ட இந்த வினாத்தாள்களில் இருந்து இறுதிக்கட்ட வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்