மினி கிளினிக்களுக்கான மருத்துவ பணியாளர்கள் நியமனம் – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள மினி கிளினிக்குகளில் மருத்துவ பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பினை பிறப்பித்து உள்ளது. இது ஊழியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
மினி கிளினிக் நியமனம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனைகளில் சிறிய வியாதிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு சளி, தலைவலி, காய்ச்சல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க மாநிலம் முழுவதும் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகளில், ஒரு கிளினிக்கிற்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவ உதவியாளர் வீதம் நியமனம் செய்யப்பட்டனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 7 முதல் துவக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!
இந்த பணியாளர் நியமனங்கள் ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தனியார் நிறுவனம் மூலம் மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட உத்தரவிற்கு அதிரடி தடை விதித்தனர். இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பிப்ரவரி 8 முதல் பொறியியல் வகுப்புகள் தொடக்கம் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
அதில் மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். இந்த உத்தரவு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்