தமிழகத்தில் ஜனவரி 3வது வாரம் பள்ளிகளை திறக்க வாய்ப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தகவல்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு உள்ள பள்ளிகள் ஜனவரி மாதம் 3வது வாரத்தில் மீண்டும் திறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமெடுக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் தேர்வுகள் நடத்துவத்தில் சிக்கல்கள் இருந்ததால் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகளில் மாற்றம் வேண்டும் – மாணவர்கள் கோரிக்கை!!
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதால், பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடந்தாக வேண்டும். இதற்கான தேதி குறித்த அறிவிப்பு சட்டமன்ற தேர்தலுக்கு பின்னரே வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் உறுதிபட தெரிவித்தார்.
இந்நிலையில் மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாமலும், மாதிரி தேர்வுகள் எழுதாமலும் பொதுத்தேர்வுகளில் நேரடியாக பங்கேற்பது சிரமம். இதனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறி இருந்தார். அதற்காக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு – ஐகோர்ட் கிளை உத்தரவு!!
ஏற்கனவே ஒருமுறை நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த முடிவும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து 10 & 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி ஜனவரி 7 & 8 என இரண்டு நாட்கள் கூட்டத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடத்தி அதில் பெறப்படும் கருத்துக்களை தொகுத்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் 12 ஆயிரம் பள்ளிகளில் கூட்டம் நடத்தப்பட்டது.
அண்ணா பல்கலை M.Tech மாணவர் சேர்க்கை நடக்குமா?? மாணவர்கள் எதிர்பார்ப்பு!!
இதில் சில பெற்றோர்கள் கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு பள்ளிகளை திறக்கலாம் என கூறி உள்ளனர். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது,
பள்ளிகள் திறப்பு குறித்து இன்று பெறப்படும் கருத்துகள் நாளை எங்களுக்கு வந்து சேரும். பெற்றோர்கள் நாளை மாலை வரை தங்களது விருப்பங்களை தெரிவிக்கலாம். தற்போது வரை உள்ள தகவல்களின் படி, அதிகப்படியான பெற்றோர்கள் 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு பள்ளிகளை திறக்கலாம் என கூறி உள்ளனர். அனைத்து கருத்துகளையும் ஆராய்ந்து அரசுக்கு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் அனுப்பப்படும்.
அதன் அடிப்படையில் முதல்வர் அவர்கள் மருத்துவ மற்றும் உயர்மட்ட குழுவினருடன் ஆலோசித்து முடிவெடுத்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார். இம்மாதம் 3வது வாரத்தில் பள்ளிகளை திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கூறி உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
It is dangerous to open schools because the other states students and teachers are affected to corona