டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு – ஐகோர்ட் கிளை உத்தரவு!!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி இடஒதுக்கீடு:
தமிழகத்தில் உள்ள அரசின் பல்வேறு துறைகளுக்கு TNPSC (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் ‘கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்’ நியமனம் – சிறப்பு டிஜிபி உத்தரவு!!
இந்த அவசர சட்டத்திற்கு 8 மாதங்களுக்கு பின்னர் ஆளுநர் பன்வாரிலால் கடந்த டிசம்பர் மாதம் புரோகித் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் பட்டப்படிப்பு மட்டுமின்றி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளிலும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் அரசுப்பணிகளில் இந்த இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை என புகார்கள் எழுந்தது.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் விரைவில் நடத்தப்பட வேண்டும் – மாணவர்கள் கோரிக்கை!!
இது தொடர்பாக TNPSC சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் விக்னேஸ்வரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எந்த வகையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டு உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்