அஞ்சல்துறை அக்கவுண்டண்ட் தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு-தேர்வர்கள் வருத்தம்!!
இந்திய அஞ்சல் துறை அக்கவுண்டண்ட் பதவிக்கான தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
அஞ்சல்துறை அக்கவுண்டண்ட் தேர்வு:
உலகில் உள்ள மிகப்பெரிய துறைகளில் 1,54,000 அலுவலகங்களை கொண்ட இந்திய அஞ்சல்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பலர் இணைய சேவையை பயன்படுத்தி அஞ்சல்துறையை மறந்து வரும் நிலையிலும் மிக முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி தகவல்கள் அஞ்சல் மூலமாகவே அனுப்பப்படுகின்றன.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் விரைவில் நடத்தப்படவேண்டும் – மாணவர்கள் கோரிக்கை!!
இத்தகைய சிறப்பு மிக்க அஞ்சல்துறையில் அக்கவுண்டண்ட் பதவிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுகள் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டும் இடம் பெற்று தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு தேர்வுகளான ஜேஇஇ-இல் கூட தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கியுள்ள நிலையில் அஞ்சல்துறை தேர்வுகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது குறித்து தேர்வர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் ‘கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்’ நியமனம் – சிறப்பு டிஜிபி உத்தரவு!!
இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கனவே, அஞ்சல்துறை தேர்வுகள் கட்டாயம் தமிழில் மட்டுமே நடைபெறும் என வாக்குறுதி அளித்தார். இருந்த போதிலும் அஞ்சல்துறை அக்கவுண்டண்ட் பதவிக்கான தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
How to apply in online