தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் விரைவில் நடத்தப்படவேண்டும் – மாணவர்கள் கோரிக்கை!!
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாணவர்களுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட நிலையில் அதற்கான தேதியை விரைவில் அறிவிக்க மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாணவர்கள் கோரிக்கை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாணவர்கள் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பொழுது முன்னுரிமை வழங்கப்படும் காரணத்தால் பலர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு இடையே தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படிப்புகளை தனியார் வணிகவியல் நிலையங்களில் பயின்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ‘கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்’ நியமனம் – சிறப்பு டிஜிபி உத்தரவு!!
இந்த படிப்புகளுக்கு தொழிநுட்ப கல்வி இயக்கம் சார்பாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படவில்லை. எனவே கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் வணிகவியல் தேர்வுகளை பிப்ரவரி மாதம் நடத்தவுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்த நிலையில், தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கான கலை சொல்லாக்கத்திற்கான விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு!!
இந்நிலையில் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் விரைவில் தேர்வு குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என தொல்நூட்ப கல்வி இயக்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். விரைவாக இந்த தேர்வுகள் முடிக்கப்பட்டால் தமிழக அரசு பணியாளர் வாரியம் நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்