சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை முறைகேடு – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் புது உத்தரவு!!
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளதால், இது குறித்து ஆய்வு செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
சிறுபான்மையின கல்வித்தொகை:
சிறுபான்மையின பள்ளி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பள்ளிகளில் உள்ள சிறுபான்மையின மாணவர்களுக்கு அரசு சார்பாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான தகுதியுடைய மாணவர்களின் விவரங்கள் அந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் சேகரித்து உதவித்தொகை பெறுவதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி பாடம் கட்டாயம் – ஆசிரியர்கள் கோரிக்கை மனு!!
அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அந்ததந்த தலைமை ஆசிரியர்களுக்கு பயனர் எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு உதவித்தொகை பெற சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை தனியார் இணையதள மையங்களுக்கு வழங்கியதாக தகவல் வெளியானது. அதில் குறிப்பிட்ட ஒரு வங்கிக்கணக்கில் பல மாணவர்களின் விவரங்கள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், “சில மாவட்ட பள்ளிகளில் மீது எழுந்துள்ள புகார் குறித்து ஆராய்ந்து உதவித்தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை மறுஆய்வு செய்து வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டும்”, என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |