ஆசிரியர் பணிக்கான போலி அறிவிப்புகளை நம்ப வேண்டாம் – அண்ணா பல்கலை அறிவுறுத்தல்!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி வெளியாகும் அதிகாரபூர்வமற்ற அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என அண்ணா பல்கலை நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இத்தகைய செயலில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் பல்கலைக்கழகம் இறங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலை பணிகள்:
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அண்ணா பல்கலை சார்பில் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பல்கலையில் ஆசிரியர் பணி பெற்றுத் தருவதாக போலி அறிவிப்புகளை கூறி ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் செயல்பாடு அதிகரித்து உள்ளது.
முதுகலை ஆசிரியர் பணியிட கலந்தாய்வு நாளை தொடக்கம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
இதனால் லட்சக்கணக்கில் பணம் கட்டி பலரும் ஏமாந்து உள்ளனர். எனவே இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில், ஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மை அற்ற, அதிகாரபூர்வமற்ற தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாத நபர்கள் சில விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு பணி வாங்கி தருவதாக கூறி வருவதாக புகார்கள் எழுந்ததுள்ளது.
இன்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் – தேதி அறிவிப்பு!!
இது போன்ற அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதனால் பொதுமக்களும் விழிப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்