
வக்பு திருத்த சட்ட மசோதா இன்று மக்களவையில் தாக்கல்…!! எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பிற்கு இடையே நிறைவேற்றப்படுமா…?
நாடு முழுவதும் வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த, கடந்த ஆகஸ்டு மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு, பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், இன்று காலை 11 மணியளவில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். மேலும், வக்பு சொத்துக்களை கையகப்படுத்தும் நோக்கத்திலே, இந்த வக்பு மசோதா கொண்டு வரப்பட்டதாக, எதிர்கட்சிகளான பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, தற்போது இதுகுறித்த விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அதன்பின், இதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கச்சத்தீவு விவகாரம் குறித்து தி.மு.க பேச அனுமதி மறுக்கப்பட்டதால், மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. குறிப்பாக, மக்களவையில் இந்த வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னரே, மாநிலங்களவைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற வரலாற்றில் வேறு எந்த மசோதாவிற்கும், இவ்வளவு எண்ணிக்கையிலான விரிவான ஆலோசனைகள் நடைபெற்றது இல்லை என்றும் ஏறத்தாழ 97 லட்சம் கோரிக்கைகள் இதன் மீது பெறப்பட்டுள்ளது என்றும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் வெளியிட்டுள்ளார்.

























