
உங்கள் பேங்க் அக்கவுண்டிலிருந்து அடிக்கடி பணம் டெபிட் செய்யப்படுகிறதா..? அப்போ கண்டிப்பா இந்த விதிமுறை பற்றி தெரிஞ்சுக்கோங்க..
சேமித்த பணத்தை பாதுகாப்பாக பராமரிக்க பெரும்பாலானோர் வங்கிகளை சார்ந்துள்ளனர். மேலும், உங்களின் சேமிப்பு கணக்கில் குறிப்பிட்ட வைப்பு தொகையை பராமரிக்க கூறி வங்கிகள் அறிவுறுத்துக்கின்றன. இந்த விதியை மீறும் பட்சத்தில் உங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படும். இந்நிலையில் பிரபல வங்கி ஒன்று தனது வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட அளவிலான பணம் டெபிட் செய்யப்பட்ட பின் திரும்ப வரவு வைக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இதுபோன்ற பணம் பிடித்தங்கள் ஆனது பெரும்பாலும் “தேசிய தானியங்கி தீர்வு இல்லம்” (NACH) மூலம் நிகழ்கின்றன. இது “RBI இன் எலக்ட்ரானிக் கிளியரிங் சேவை (ECS) போல செயல்படுகிறது”. இந்த “NACH கிளியரன்ஸ் பொதுவாக கடன் EMI-கள், காப்பீட்டு பிரீமியங்கள் அல்லது சந்தா கட்டணம் போன்ற தொடர்ச்சியான கொடுப்பனவுகளை திட்டமிடப்பட்ட தேதியில் உங்கள் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை தானாகவே கழிக்கிறது”. அந்த வகையில் “எந்தவித முன் அறிவிப்பு இல்லாமல் உங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கணக்கில் பணம் கழிக்கப்பட்டதை நீங்கள் கவனித்திருந்தால், அது உங்கள் கணக்கில் போதுமான இருப்பு இல்லாததாலும், தோல்வியுற்ற பரிவர்த்தனைக்கு அபராதமாகவும் NACH ஆணையம் ரூ.295 (ரூ.250 அபராதம் +ரூ.45 ஜிஎஸ்டி) பிடித்தம் செய்துள்ளது. இந்தக் கட்டணங்களைத் தவிர்க்க, திட்டமிடப்பட்ட EMI தேதியின் போது உங்கள் கணக்கில் போதுமான நிதியை பராமரிப்பது அவசியம் என்றும், உங்கள் கணக்கு இருப்பைத் தொடர்ந்து சரிபார்த்து அதை பராமரிப்பதன் மூலம் இதுபோன்ற தேவையற்ற அபராதங்களை தடுக்கலாம் என்று வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

























