
BREAKING NEWS: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 விடுமுறை..!! அரசு அதிரடி அறிவிப்பு”…!!
உலகநாடுகளில் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் “கிறிஸ்துமஸ்” பண்டிகையை வெகு கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். மேலும், தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு முக்கிய பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், டிசம்பர் 28 ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

























