இனி ஆசிரியர்களுக்கும் இலவச “Laptop”..!! “அறிவிப்பு வந்தாச்சு…இனி, ஒரே ஜாலி தான்”..!!
தமிழ்நாடு முழுவதும் 33 ஆயிரத்திற்கும் மேல் அரசு பள்ளிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் சிறந்த கற்றல், கற்பித்தல் சூழலை ஏற்படுத்த புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அது என்ன திட்டம் என்பதை கீழே விரிவாக காண்போம் வாருங்கள்.
அதாவது, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தல் சூழலை மேம்படுத்த “கையடக்க கணினி” (Laptop) வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. மேலும், தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரையிலான அறிவியல் பாடங்களை சிறந்த முறையில் கற்பிக்கும் 500 ஆசிரியர்களை தேர்வு செய்து, 5 நாட்களுக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்க உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியின் மூலம், எதிர்காலத்தில் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கவும், பணியை தேர்ந்தெடுக்கவும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.




























ஒரே ஜாலினா குசால்படம் பார்க்க கொடுக்கிற மாதிரி செய்தி போடக்கூடாது சரியா?
கல்வி நேரம் போக மீதி எல்லாதொலைக்காட்சி தொடர் தவறாது பாத்துடலாம்