
சொந்த ஊருக்கு செல்வோருக்கு தீபாவளி பரிசு…அக்டோபர் 28-ல் இருந்து ஆரம்பம்”…!! ” தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு”..!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு வர படையெடுத்துள்ளனர். அவ்வாறு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு அரசு பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 14,086 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக “ப்ரீ புக்கிங்” செய்ய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தோனி..? அவரே சொன்ன கருத்து வைரல்!!
அதாவது, கோயம்பேட்டில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ஓசூர் மற்றும் பெங்களூரு வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து கரூர், திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக செல்லும் சேலம், கும்பகோணம், திருச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

























