அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா..!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!
தமிழக அரசின் தீவிர முயற்சியால், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் உருவெடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.90 லட்சம் முதலீட்டில் ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது. அந்த வகையில், தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஊக்குவிக்கும் வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























