சென்னையில் மழை பொழிவு எப்படி இருக்கும்?? வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்.. விவரம் உள்ளே!!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதை நாம் அறிவோம். இந்நிலையில் சென்னையில் மழை பொழிவு எப்படி இருக்கும் என்பதை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதில், ‘சென்னையில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் தான் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது’. ‘ரெட் அலெர்ட் என்றால் எல்லா இடங்களிலும் 20 செ.மீ அளவுக்கு மேல் கனமழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை’. ‘பாதிப்புகளை கருத்தில் கொண்டே எச்சரிக்கை’ என்றார். ‘வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது’. ‘தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை பதிவான மழையின் அளவு 138 மி.மீ’. ‘இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 71 மி.மீ, இது இயல்பை விட 94% அதிகம்’ என்று தெரிவித்துள்ளார்.


























