
சென்னைக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது சென்னைக்கு மிக அருகில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனாலும், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து விட்டது. தற்போது ஒருசில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ள நிலையில் அங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடி பழனிச்சாமி… பதிலடி கொடுத்த உதயநிதி.. விவரம் உள்ளே!!
இந்நிலையில் இன்று (அக்டோபர் 16) சென்னை பள்ளிக்கரணையின் நாராயணபுரம் ஏரியில் மழைநீர் அளவு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அவர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘மழைநீர் தேங்குவதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்’. ‘தூய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் இந்த பணியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள்’. ‘அத்தனை பேருக்கும் சென்னை மாநகர மக்கள் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

























