
மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!! ” இதோ உங்களுக்காக”..!!
தமிழகத்தில் தொடர்ந்து விடாமல் பெய்து வரும் மழையால், பல்வேறு நோய் தொற்றுகள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது . எனவே, மழை காலங்களில் தொற்றுகள் நம்மை பாதிக்காத வண்ணம் பாதுகாத்து கொள்ள சில வழிமுறைகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம்.
1. வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
2. குடி நீரை சுட வைத்து அருந்த வேண்டும்.
3.சூப், ரசம், தேநீர், காபி போன்ற ஆகாரங்களை சூடாக அருந்துவது மூலம் உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
4.வீட்டிற்கு அருகில் குப்பைகளை போடாமல், குப்பை தொட்டியில் போடுவது மூலம் கொசு போன்ற நோய் பரப்பும் பூச்சிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள உதவும்.
இன்று 8 விமான சேவை ரத்து..!! இது தான் காரணமா .!! விமான நிலைய அதிகாரி தகவல்..!!
5. அத்தியாவசிய பொருட்களை முன்னதாகவே வாங்கி வைத்திருக்க வேண்டும்.
6. அனாவசியமாக வெளியே செல்ல கூடாது.
7. வானிலை பற்றிய தகவலை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
8. டார்ச் லைட், மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை அருகிலேயே வைத்து கொள்ள வேண்டும்.
9. அதிக அளவில் காய்கறிகள், கீரைகளை உட்கொள்ள வேண்டும் .

























