தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி., அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு., !!!
சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெளியிடங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை (12-09-2024) இந்த இடங்களில் மின்தடை.. இப்போவே அலர்டா இருங்க மக்களே!!
இதன் காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளனர் .
























