UPI க்கு வரப்போகும் புதிய அப்டேட்..! இத மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க..!
இந்தியாவில் UPI பண பரிவர்த்தனை என்பது மிகவும் அதிகரித்துள்ளது. அதாவது, வங்கி கணக்கிலிருந்து மிகவும் சுலபமான முறையில் பண பரிவர்த்தனை செய்ய UPI மிகவும் உதவியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து தற்போது UPI ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது . அதாவது, ஒரு வங்கி கணக்கை வைத்து ஒரு குடும்பத்தில் உள்ள 5 நபரும் அந்த கணக்கிற்கான UPI ஐடியை உபயோகித்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
போனா வராது பொழுது போன கிடைக்காது..! ஆதார் அட்டையை புதுப்பிக்க இதுதான் சரியான வாய்ப்பு..!
மேலும் , ” UPI டெலிகேட் பேமென்ட் சிஸ்டம் ” என அழைக்கப்பட்ட இந்த அம்சம் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் மூலம் கொண்டுவரப்படவுள்ளது. இந்த அம்சம் மூலம் பெற்றோர்களின் வங்கி கணக்கை அவர்களின் குழந்தைகளும் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்கிறது. மேலும் , இந்த அம்சம் கூடிய விரைவில் அனைவரின் பயன்பாட்டிற்கு நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
























