தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பலரும் இந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க மழை பெய்யாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எட்டாக்கனியாகும் தங்கம்…!!! ” இனி நடுத்தர மக்கள் வாங்கவே முடியாதா”..??
அதாவது, மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஆகஸ்ட் 26) முதல் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், ஓரிரு இடங்களில் சாரல் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
























