இந்தியாவில் தீவிரமாய் பரவும் எலிக்காய்ச்சல்.. பொதுமக்களே உஷார்!!
மழைக்காலங்களில் பொதுவாக கொசுக்கள் மற்றும் குடிநீர் மூலமாக அதிக அளவிலான நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பருவமழை காலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை செய்து வருகிறது. ஆனாலும் சமீப காலமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் டெங்கு காய்ச்சல்…அதிகரிக்கும் பாதிப்பு.. அச்சத்தில் மக்கள்..!!
கடந்த 2021 ஆம் ஆண்டு 121 பேர் பலியான நிலையில், நடப்பு ஆண்டில் நேற்று வரை 121 உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 1,916 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எண்ணிக்கை உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
























