TNPSC குரூப் 4 தேர்வு பாடத்திட்டத்தின்படி பொருளியல் பகுதியில் இருந்து குறைந்தது 6 கேள்விகள் கேட்கப்படும். மிகவும் எளிமையான, அதே நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் தான் பொருளியல் பாடங்கள் அமைந்திருக்கும். இதனால் பாடங்களை படிப்பதுடன், முந்தைய ஆண்டு வினாத்தாள்களை ஆராய்வதும் முக்கியம். அப்போது தான் கேள்விகள் எந்த அடிப்படையில் கேட்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த பதிவில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட சில கேள்விகள் விடையுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
Q.1) வெண்மைப் புரட்சியின் தந்தை எனக் கருதப்படுபவர்
a) M.S. சுவாமிநாதன் b) A.M. சக்கரபர்த்தி
c) V. குரியன் d) ஐயன் வில்மட்
Q.2) நீல புரட்சி எந்த நோக்கத்திற்காக நடைமுறைபடுத்தப்படுகிறது?
a) ஆடை தயாரிப்பு தொழிலில் உள்ள தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக
b) கட்டுமான தொழிலில் உள்ள தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக
c) விவசாய தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக
d) மீனவர் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக
Q.3) பின்வருவனவற்றுள், மத்திய அரசின் வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறையால் நடத்தப்படும் “விவசாயிகள் களப் பள்ளி” மூலம் ஒரு விவசாயி எத்தகைய அறிவினைப் பெற முடியும்
(a) மண், உரம் மற்றும் பயிர் மேலாண்மை பற்றிய முறைகள் மற்றும் பயிற்சி
(b) வங்கிக் கடனை எப்படிப் பெற முடியுமென்ற விவரம்
(c) நிலவள பற்றாக்குறைக்கான அறிகுறிகளைப் புரியும் அறிவு
a) (a) மட்டும்
b) (b) மட்டும்
c) (c) மட்டும்
d) (a) மற்றும் (c)
Q.4) இந்திய உணவுக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
a) 1962 b) 1963
c) 1964 d) 1965
Q.5) வார்தா கல்வி முறையை கொண்டு வந்தவர் யார்?
a) மகாத்மா காந்தி b) ஜவஹர்லால் நேரு
c) Dr. ராதாகிருஷ்ணன் d) ஹர்டாக்
விடைகள் – 1-C, 2-D, 3-D, 4-D, 5-A
Follow our Instagram for more Latest Updates
இந்திய கடற்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2024 – 300 காலிப்பணியிடங்கள்!!!