தமிழக அரசில் ரூ.50,000/- மாத சம்பளத்தில் வேலை ரெடி – மிதிவண்டி ஓட்ட தெரிந்தால் வேலை உறுதி!
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் (TNRD) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் இரவுக் காவலர் (Night Watchman) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் (TNRD) |
பணியின் பெயர் | Night Watchman |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNRD ஊராட்சி ஒன்றிய காலியிடங்கள்:
இரவுக் காவலர் (Night Watchman) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Night Watchman பணிக்கான தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராகவும், மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராகவும் இருப்பது போதுமானது ஆகும்.
Night Watchman வயது:
- இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- SC / ST – 05 ஆண்டுகள், BC / MBC / Minority Community – 02 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Night Watchman ஊதியம்:
இரவுக் காவலர் (Night Watchman) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
TNRD தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNRD விண்ணப்பிக்கும் விதம்:
இந்த TNRD அலுவலக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், திருச்சுழி என்ற முகவரிக்கு 19.12.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.