8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்ற இந்தியா – ரசிகர்கள் குதூகலம்!
இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா வெற்றி:
10 நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 5ஆம் தேதி துவங்கியுள்ள நிலையில் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 9வது லீக் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியினர் மோதிக்கொண்டனர். ஏற்கனவே, இந்தியா ஆஸ்திரேலியா அணியுடன் மோதி 199 ரன் வித்தியாசத்தில் ஒரு வெற்றியை பதிவு செய்தது.
தமிழகத்தில் ரேசன் கார்டு வகையை மாற்ற புதிய உத்தரவு – வெளியான அறிவிப்பு!
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. அதாவது, டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியினர் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 272 ரன்களை பெற்றனர். இதன் பின்னர், களம் இறங்கிய இந்திய அணியினர் 35 ஓவரின் முடிவிலேயே 273 ரன்களை குவித்து வெற்றி வாகை சூடியது. குறிப்பாக, ரோகித் சர்மா இந்த தொடரில் 84 பந்துகளில் 131 ரன்களை குவித்துள்ளார். இரண்டாவது முறையாக இந்தியா வெற்றி பெற்றிருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.