இந்தியாவில் உணவு பொருட்களுக்கான ஹலால் சான்றிதழ் – வெடிக்கும் சர்ச்சை!
நாடு முழுவதும் ஹலால் உணவு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதை எதிர்த்து தற்போது “Say No To Halal ” சர்ச்சை வெடித்துள்ளது.
ஹலால் சான்றிதழ்:
இஸ்லாமிய முறைப்படி ஹலால் செய்யப்பட்ட இறைச்சி மற்றும் உணவு பொருட்களை மட்டுமே இஸ்லாமிய சமூகத்தினர் உட்கொள்ள வேண்டும். இதற்காக 1974ம் ஆண்டு முதல் தான் நாட்டில் இறைச்சிக்கான ஹலால் சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் 1993ம் ஆண்டுக்கு பிறகு மற்ற பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் முறை விரிவுபடுத்தப்பட்டது.
மழையால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – பாடங்களை முடிக்க முடியாமல் திணறும் ஆசிரியர்கள்!
தற்போது நாட்டில் ஹலால் செயல்பாடு கட்டாயமாக்கப்பட்டு, விருப்பமற்ற மற்ற மதத்தினர் மீதும் திணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், “Say No To Halal ” என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.