சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த புதிய மாற்றம் – நிர்வாகம் முக்கிய அறிக்கை!

0
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த புதிய மாற்றம் - நிர்வாகம் முக்கிய அறிக்கை!
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த புதிய மாற்றம் - நிர்வாகம் முக்கிய அறிக்கை!
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த புதிய மாற்றம் – நிர்வாகம் முக்கிய அறிக்கை!

சென்னையில் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின் படி மெட்ரோ பயண அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறை பயன்படுத்தி வாகனங்களை நிறுத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ அறிவிப்பு:

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மக்கள் பலர் பொது போக்குவரத்திற்கு மெட்ரோ ரயில்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவது குறித்து பயணிகள் கோரிக்கை வைத்தனர். தற்போது இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் மெட்ரோ பயண அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் வாகன நிறுத்தம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் 150 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து – தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு!

மேலும் மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகள் வாகனம் நிறுத்தும் தேவையை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தி இருசக்கர நான்கு சக்கர வாகன நிறுத்தும் இடத்தை திறந்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதில் 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை மெட்ரோ பயணிகளுக்கு இலவசமாக வாகனம் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் மெட்ரோ பயண அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறைகளை பயன்படுத்தி பார்க்கிங் கட்டணத்தை செலுத்தி வாகனங்களை நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!