தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் மதுபானங்கள் அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக அமைச்சர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மது விற்பனை:
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு பொதுமக்களிடம் மதுபானங்கள் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுவரைக்கும் 1977 பேர் மீது கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ததாக கிட்டத்தட்ட 5.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரொமான்ஸில் கலக்கும் முத்து மீனா.. அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் என்ன? – ” சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
இதுகுறித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் எந்தெந்த கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து புகார் அளிக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு ஊழல் நடைபெற்று வருவதாகவும் அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் நிபுணர்களிடம் தெரிவித்துள்ளார்.