இந்தியாவில் 9000 – ஐ கடந்த கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி பாதிப்புகள் 9,000 – ஐ தாண்டியுள்ளது சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக மீண்டும் கட்டுப்பாடுகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை தினந்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டு வருகிறது.
ஜூலை 31 முதல் ஹலோ சேவைகள் நிறுத்தம் – அமேசான் நிறுவனம் அறிவிப்பு!
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,42 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 57, 410 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 0.13 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 220. 66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,358 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.