ஜூலை 31 முதல் ஹலோ சேவைகள் நிறுத்தம் – அமேசான் நிறுவனம் அறிவிப்பு!
வாடிக்கையாளர்களுக்கு சுகாதார கண்காணிப்புகளை வழங்கி வரும் ஹலோ சேவையை வரும் ஜூலை 31ம் தேதி முதல் அமேசான் நிறுவனம் நிறுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஹலோ சேவை
அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான அமேசான் நிறுவனம் அவ்வப்போது தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் சில துறைகளில் இருந்து ஊழியர்களை அவ்வப்போது பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஹாலோ பிரிவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதாவது, உடல்நலம் மற்றும் வாடிக்கையாளர்களின் தூக்கங்களை கண்காணிப்பதற்கான ஹாலோ என்கிற பிரிவை அமேசான் நிறுவனம் கடந்து 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
தமிழகத்தில் 1463 கணினி பயிற்றுனர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் – அரசு முதன்மை செயலர் அறிக்கை!
அதாவது, இந்த ஹாலோ பிரிவின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு உடல், உடற்பயிற்சி கண்காணிப்பு மற்றும் சுகாதார கண்காணிப்பு உட்பட பல சேவைகள் வழங்கப்பட்டது. இதனிடையே இந்த ஹலோவை தற்போது அமேசான் நிறுவனம் வரும் ஜூலை 31ம் தேதியிலிருந்து நிறுத்த இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், முந்தைய 12 மாதங்களில் செய்யப்பட்ட ஹலோ சாதனத்தையும் முழுமையாக திருப்பித் தருவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலமாக பல ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட உள்ளனர்.