அதிரடியாய் குறைந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
அக்ஷய திருதியின் காரணமாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை
அக்ஷய திருதியை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருந்து வருகிறது. அதாவது, தற்போது 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.48,000 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்றைய விலைப்படி 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 6,108 ரூபாய்க்கும், சவரனுக்கு 48,864 ரூபாய்க்கும் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் குறைய ஆரம்பித்து இருக்கிறது.
தமிழகத்தில் மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதன்படி சென்னையில் இன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 2 குறைந்து ரூ. 6106 ரூபாய்க்கும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.48,848 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. மேலும், நேற்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 80.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதே விலை 80.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.