பிப். 10 (நாளை) அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை!!
புதுச்சேரியில் பிப்ரவரி 10 ஆம் தேதி கதிர்காம முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு புதுவையில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை விடுமுறையை அறிவித்துள்ளது.
விடுமுறை:
புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் செடல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை காண புதுவையில் இருந்து மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
தமிழகத்தில் திருநங்கைகளுக்கான விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஆட்சியர் தகவல்!
Follow our Instagram for more Latest Updates
நடப்பு ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த 2ம் தேதி முதல் தொடங்கியது. இதனை அடுத்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேகங்கள் நடந்து வருகிறது. மேலும் முக்கிய வீதிகளில் அம்மன் வீதி உலாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இன்று அம்மனின் முத்து பல்லாக்கு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக முக்கிய நிகழ்வான நாளை (பிப்.10) செடல் திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது புதுவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த செடல் திருவிழாவை முன்னிட்டு நாளை புதுவையில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.