தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கு 7% இட ஒதுக்கீடு – தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இதன் மூலம் மாற்று திறனாளர்களும் சமூகத்தின் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த நிலையில் காதுகேளாதோர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு, ஊக்கத்தொகை, கல்வி உதவித்தொகை போன்றவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் காதுகேளாதோர் சங்கம் சார்பில் அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் சங்கம் சார்பில் விழா கொண்டாடப்பட்டது. இதில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவின் போது சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்றினர்.
3,000 ஊழியர்களை புதிதாக நியமித்துள்ள இந்திய நிறுவனம் – அதிசயிக்கும் மற்ற முன்னணி நிறுவனங்கள்!
Exams Daily Mobile App Download
அதாவது அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதனை தொடர்ந்து உதவித்தொகையை 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அத்துடன் காதுகேளாதோர்களுக்கு இலவச வீடு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.