3,000 ஊழியர்களை புதிதாக நியமித்துள்ள இந்திய நிறுவனம் – அதிசயிக்கும் மற்ற முன்னணி நிறுவனங்கள்!
உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் சிக்கலான பொருளாதார சரிவை ஈடு கட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், இந்திய நிறுவனம் புதிதாக 3,000 ஊழியர்களை நியமனம் செய்து அசத்தியுள்ளது.
பணி நியமனம்:
கொரோனா கால நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு பிறகு கடந்த ஆண்டு முதல் நல்ல முன்னேற்றத்தை கண்டு வந்த வர்த்தக மற்றும் தொழில் துறைகள் கடந்த சில மாதங்களாக எதிர்பாராத சரிவை சந்தித்து வருகிறது. இதனால் நிறுவனங்கள் லாபம் குறைந்து வருமான இழப்பை அடைந்துள்ளது. இதனால் தங்களின் செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயத்தால் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ஊதிய உயர்வை தாமதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் – இலவச பிஸ்கட், முட்டை … முதல்வர் ஆணை!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனமான L&T தற்போதைய 2022- 2023ம் நிதியாண்டில் 3,000 ஊழியர்களை புதிதாக நியமித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 3 மடங்கு அதிகம் ஆகும். பயிற்சி பொறியியல் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், கடந்த ஆண்டில் வெறும் 248 ஆக இருந்த பெண் ஊழியர்களின் எண்ணிக்கையானது, நடப்பு ஆண்டில் 1,009 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. L&T ன் நடவடிக்கைகளை மற்ற நிறுவனங்கள் கண்டு வியந்து வரும் வகையில் உள்ளது.