புதிய தலைமையை நியமிக்க விரும்பும் எலான் மஸ்க் – ட்விட்டர் ஊழியர்களுக்கு கால கெடு விதிப்பு!
ட்விட்டர் நிறுவனத்தின் பெயர் தான் செய்திகளில் சமீப நாட்களில் அதிக அளவு இடம் பெற்று வருகிறது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் அதிபர் தற்போது பரபரப்பான புதிய செய்திகளை வெளியிட்டுள்ளார்.
மஸ்கின் முடிவு:
ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் எலான் மஸ்க் சொந்தப்படுத்திக் கொண்டுள்ளார். அப்போது முதல் தினமும் ட்விட்டர் குறித்து பரபரப்பு நிறைந்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. மஸ்க் அதிரடியான முடிவுகளை சரமாரியாக எடுத்து வருகிறார். செயலியின் செயல்பாடு முதல் நிறுவனத்தின் ஊழியர்கள் வரை அனைத்திலும் மாற்றத்தை உண்டாகி வருகிறார்.நிறுவனத்தில் 3,700 ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், ஒப்பந்த ஊழியர்கள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டனர்.
Airtel பயனர்கள் கவனத்திற்கு – இனி ரீசார்ஜ் திட்டத்தில் இந்த அம்சம் கிடையாது!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திற்கு தனியாக தலைமை நிர்வாகியை நியமிக்க இருப்பதாகவும், தற்போது செய்து வரும் நிறுவனத்தின் மறுசீரமைப்பு பணிகளை இந்த வாரம் நிறுத்திக் கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வியாழக்கிழமையான இன்று மாலை 5 மணி வரை அவகாசத்தை அளித்து, பணி செய்ய விரும்புபவர்கள் மட்டும் தொடரலாம், மற்றவர்கள் விலகிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.