தமிழக அரசு மருத்துவமனை செயல்பாடுகள் கண்காணிப்பு -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் வழங்கப்பட்டது தொடர்பாக போடப்பட்ட வழக்கு விசாரணையில் இன்று உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசு மருத்துவமனை:
கோவை அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்து பொருட்களை நோயாளிகளுக்கு வழங்கியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த நபர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி காலாவதியான மருந்து பொருட்களை விநியோகித்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து காலாவதியான மருந்து பொருட்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை அமைத்து அவ்வப்போது சோதனை நடத்த வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தது. பிறகு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர் வருகையை கண்காணிக்க வேண்டும்.
நாட்டில் இனி விமான பயணத்தில் ‘இது’ கட்டாயமில்லை – போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும் நோயளிகளுக்கு உரிய சிகிக்சை அளிக்கப்படுகிறா? என்பதை சோதனை செய்ய மண்டல மற்றும் மாவட்ட அளவிலான பறக்கும் படைகள் அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அரசு அமைக்கப்படும் பறக்கும் படைகள் முழுமையாக செயல்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.